தேவையான பொருட்கள்:
பெரிய நெல்லிக்காய்
|
2 (அல்லது) 3
|
துறுவிய தேங்காய்
|
2 டேபிள் ஸ்பூன்
|
பச்சை மிளகாய்
|
2
|
உப்பு
|
தேவையான அளவு
|
கட்டித் தயிர்
|
3/4 கப்
|
எண்ணெய்
|
1 டீ ஸ்பூன்
|
கடுகு
|
சிறிதளவு
|
செய்முறை:
1. நெல்லிக்காயை வெட்டி விதைகளை
எடுத்து விடவும்.
2. எண்ணெயில் கீறிய பச்சை
மிளகாயை வதக்கிக் கொள்ளவும், அதிக நேரம் வதக்க வேண்டும்.
3. மிளகாய், நெல்லிக்காய்,
உப்பு, தேங்காயைச் சிறிதளவு நீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
4. சிறிது எண்ணெயில் கடுகு
தாளித்து பச்சடியில் சேர்க்கவும்.
5. பரிமாறுவதற்கு முன்
கட்டித் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக